Friday, 15 July 2011


உன் அதீத அலட்சியம் தந்த
மிகப் பெரிய வேதனையின் முடிவில்
உறுதியாய்த் தீர்மானித்தேன்
உன்னை மறந்து விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்

திரையரங்கில்.....
நூலகத்தில்....
புத்தக இடுக்கில்....
பேருந்தில்...
சித்தி வீட்டில்....
அழுது வடிந்த
ஒரு மெகா சீரியலில்...
அலுவலகத்தில்...
சாலையில் பார்த்த
னை மறந்து விடுவதென்று!

உன் நினைவுகளை எங்கேனும்
தொலைத்து விடலாமென
அழைத்துக் கொண்டு கிளம்பினேன்

திரையரங்கில்.....
நூலகத்தில்....
புத்தக இடுக்கில்....
பேருந்தில்...
சித்தி வீட்டில்....
அழுது வடிந்த
ஒரு மெகா சீரியலில்...
அலுவலகத்தில்...
சாலையில் பார்த்த

குழந்தையின் முகத்தில்....

எங்கே தொலைப்பதென
அலைந்து திரிந்து மீண்டும்
வீட்டிற்குத் திரும்பினேன்.

செருப்புகளைக் கழற்றுகையில்
உறைத்தது...
உன் நினைவுகளைக்
காணவில்லை.

மகிழ்ச்சியாய் நுழைந்து
படுக்கையறையைத் திறந்தேன்

அலைந்த களைப்பில்
அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
என் கட்டிலில் படுத்து
உறங்கிக் கொண்டிருந்தன
உன் நினைவுகள்!

Thursday, 28 May 2009



அதிகாலைக்கு முன்பே
சந்தையில்
அலைபவர்களுக்குத் தெரியும்
தொலைக்கும்
அதிகாலைத் தூக்கம்
எத்தனை புனிதமானதென்பது.
வலுக்கட்டாயமாய்
இமைகளைப் பிரித்து வைத்து
படிக்க முயலும்
மாணவர்களுக்கும்
தெரிந்திருக்கக் கூடும்.
இருளில் மட்டுமே
துழாவித் திரியும்
கூர்க்கா விழிகளும்,
மழை உலுக்கி எழுப்பிய
குடிசை வீடுகளும்
அறிந்திருக்கக் கூடும் அதனை.
உன்
அமைதியான தூக்கத்தை
ரசிப்பதற்காகவே
எழும்பும் எனக்கு மட்டும்
புரியவே இல்லை
அதிகாலைத் தூக்கம்
அத்தனை அற்புதமா ?